×
 

கை தவறி வெடித்த நாட்டுத் துப்பாக்கி... பெண் மீது அடுத்தடுத்து பாய்ந்த 4 குண்டுகள்... 17 வயது சிறுவன் கைது...!

நாட்டுத்துப்பாக்கி கை தவறி வெடித்ததில் பெண் மீது 4 குண்டுகள் பாய்ந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அருகே நாட்டு துப்பாக்கியால்  சுட்டதில் பெண் மீது 4 குண்டுகள் பாய்ந்தது. இதுதொடர்பாக பெண்ணின் 17 வயது மகனை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பால்ரஸ் குண்டுகளை நிரப்பியபோது கை தவறி அழுத்தியதில் குண்டுகள் வெளியேறி சிறுவனின் தாய் படுகாயம் அடைந்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் அருகே உள்ள பழந்தின்னிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 17 வயது மகன் சமீபத்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி முயல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக  தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த கண்ணனின் மகன் நாட்டுத் துப்பாக்கியில் பால்ரஸ் குண்டுகளை நிரப்பிய போது, திடீரென கை தவறி துப்பாக்கியை அழுத்தியதால் அவரது தாய்  செல்வியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதி உள்பட 4 இடங்களில் பால்டுரஸ் குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த செல்வியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையும் படிங்க: விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு..? வெடிக்கும் பிரச்சனை..!

சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்ததோடு, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதோடு சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
 

இதையும் படிங்க: NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share