திமுக - காங்கிரஸ் கூட்டணி கலகலத்து போச்சு..! ஆடிப் போயிருக்கு... R.B. உதயகுமார் விமர்சனம்..!
திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆடிப் போயிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஆர். பி. உதயகுமார் பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈர்த்தன. திமுகவும் காங்கிரஸும் தங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதை அவர் கேலி செய்தார். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தரப்பிலிருந்து வந்த ஆட்சியில் பங்கு கோரும் கோரிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உள் மோதல்களை சுட்டிக்காட்டி, “எங்க கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு என்று சொல்றீங்களே, முதல்ல மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்லுங்க” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மாணிக்கம் தாகூரை கூட்டணிக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி அவரை கட்சியிலிருந்து நீக்க முடியுமா என்று சவால் விட்டுப் பேசினார்.இதனால் திமுக - காங்கிரஸ் இடையே உள்ள பேச்சுவார்த்தை குழு அமைத்து மூன்று மாதங்களாகக் காத்திருப்பது போன்ற விவகாரங்கள் வெளியே தெரிய வந்துள்ளன.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! விஜய் கட்சியில் இணைந்த அதிமுக EX.MLA..! ஷாக் மேல ஷாக்..!
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆடிப் போயும் கலகலத்து போயும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து கொண்டே வருகிறது என்று கூறினார். ஆட்சியில் பங்கு என்று மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து எதிர்கட்சியினர் பல்வேறு கேள்விகளை முன் வைப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.
இதையும் படிங்க: சூடு பிடிச்சாச்சு..! ஜெ. பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல்? திமுகவை முந்தும் EPS..!