திமுக வார் ரூம்களில் உச்சக்கட்ட பரபரப்பு! பெருசாக ப்ளான் செய்யும் அறிவாலயம்! கசிந்தது சீக்ரெட்!
வார் ரூமில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது கிளை நிர்வாகிகள் வரைக்கும் சென்று சேரும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம் முழுக்க டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. இதன் மையமாக வார் ரூம் செயல்பட்டு வருகிறது.
வார் ரூம் என்பது ஒரு கட்சியின் மொத்த பிரசாரத்தையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் உயர் தொழில்நுட்ப மையம். தொகுதி வாரியாக கள நிலவரம், மக்களின் எண்ண ஓட்டம், சர்வே முடிவுகள், பிரசாரத்தின் தாக்கம் ஆகிய அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவாகி, நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது. ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது உடனடியாக கீழ்மட்ட நிர்வாகிகள் வரை சென்று சேர்கிறது.
பெரிய அளவில் பொருளாதார வசதி கொண்ட கட்சிகள் மட்டுமே இத்தகைய அதிநவீன வார் ரூம்களை அமைத்து செயல்படுத்த முடிகிறது. இந்த வகையில், தி.மு.க.வின் வார் ரூம்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி அமையாததால் ராகுல்காந்தி அப்செட்! திமுகவுக்காக தூது போகும் கமல்!
குறிப்பாக, ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் வார் ரூமில் இணைந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் மிக முக்கிய பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி, திடீரென ஓரங்கட்டப்பட்டார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு அவர் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
அதேபோல், மற்றொரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும் எதிர்பாராத வகையில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவர்கள் உள்ளிட்ட பல ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் தற்போது தி.மு.க.வின் கட்டளை மையமான வார் ரூமில் இணைந்து செயல்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் களத்தில் யதார்த்தமான நிலவரத்தை உடனடியாக அறிந்து, அவசர சூழல்களில் தாமதமின்றி முடிவெடுப்பது, பல்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்களை திரட்டி பகுப்பாய்வு செய்வது போன்ற முக்கிய பணிகளில், பயிற்சி பெற்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
தி.மு.க.வின் வார் ரூம் இத்தகைய தொழில்முறை அணுகுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை துல்லியமாக கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?