ஸ்டாலின் மனைவியோ, எடப்பாடி மனைவியோ அப்படி சொல்லாத போது... விஜய் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்? - சாட்டை துரைமுருகன் நெத்தியடி...!
கரூர் சம்பவத்தில் நம்பர் ஒன் குற்றவாளி விஜய் தான் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்
அவர் பேசும்போது: கரூர் சம்பவத்தில் ஏ1 குற்றவாளி விஜய் தான். சிபிஐ மறுத்தாலும் நான் சொல்கிறேன் ஏ1 குற்றவாளி விஜய்.. விஜய்... விஜய் தான் குற்றவாளி. டிசம்பர் 13 நடக்க வேண்டிய கூட்டத்தை தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டுவதற்காக செப்டம்பர் 27 க்கு மாற்றி அங்கு ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை.
ஏ ஒன் குற்றவாளி என்று நான் கூறியதற்கு முடிந்தால் என் மீது வழக்கு போடட்டும். வழக்குகளுக்கு அஞ்சியவன் நான் அல்ல தக்கலையில் கனிம வளங்கள் பற்றி பேசியதற்காக என் மீது குண்டாஸ் போடப்பட்டது. அப்போது கூட தைரியமாக நான் சிறைக்கு சென்றேன்.
இதையும் படிங்க: வெறித்தனம்... வெறித்தனம்..!! நாளை மறுநாள் TVK வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்..!!
ஆனால் கரூர் சம்பவத்தில் இவர்கள் அனைவரும் புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், சிடி நிர்மல் குமார் போன்றோர் செல்போனை அணைத்து வைத்துவிட்டனர்,.
உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி மனைவியோ ஸ்டாலின் மனைவியோ சொல்லவில்லை, விஜய் மனைவி சங்கீதா கூறி இருக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்று நமக்குத் தெரிய வந்திருக்கிறது. அஜித் ரசிகர்கள் ஓட்டை பெறுவதற்காக நான் விஜய் அதிகம் தாக்குவதாக கூறுகிறார்கள், உண்மையாகவே நான் அஜித் ரசிகன் தான் விஜய் தாக்கி பேசுவது ஒரு என்டர்டைன்மென் தான்.
அதிமுக, திமுக பரிசு பொருள் தருகிறார்கள் என்றால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை தருகிறார்கள். நீங்கள் பூஸ்ட், செம்படம், சொம்பு என்று தருவது யார் வீட்டில் அடித்த கொள்ளை.தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் அவர் கட்சியின் கொள்கைகள் பற்றி என்னுடன் நேருக்கு நேர் பேச தயாரா நாளை மதியம் வரை நான் இங்கு தான் இருப்பேன் தவெக தமிழ்நாட்டுக்கு என்ன செய்யும் என்று என்னுடன் பேச தயாரா? என சவால் விடுத்தார்.
இவர்கள் சொல்வது போல் இவர்கள் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழக பட்ஜெட்டை விட அந்தத் தொகை எங்கோ செல்கிறது 2500 ரூபாய், தாலிக்கு தங்கம், தாய்மாமன் சீர் மோதிரம் என கொடுத்தால் அது ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி தாண்டி வருகிறது தமிழக ஆண்டு பட்ஜெட் 45 ஆயிரம் கோடி வரை தான் உள்ளது அப்படி இருக்க எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மதசார்பற்ற கட்சி என்று கூறும் நபர் என் குல்லா போட்டு ரம்ஜான் நோன்பில் கலந்து கொள்ள வேண்டும். அப்படியே குல்லா போட்டாலும் மனதில் இருந்து நமாஸ் பண்ண வேண்டும் ஓட்டுக்காக செய்யக்கூடாது. இவ்வளவு நேரம் விஜய் பற்றி பேச காரணம் அது ஒரு என்டர்டைன்மென்ட் எனக்கூறினார்.
இதையும் படிங்க: பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!