×
 

SIR பணியின் போது தகராறு... திமுக -அதிமுகவினரிடையே கைகலப்பு...!

எஸ் ஐ ஆர் பணியின் போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!

இந்த நிலையில் திமுகவினர் 50 படிவங்களை வாங்கிச் சென்று நிரப்புவதாக கடும் குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்தது. எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெறும் இடங்களில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் பாகம் முகவர்கள் உடன் இருக்கின்றனர். இந்த நிலையில் மாதவரத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நடந்த போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: ALMOST முடிஞ்சது... SIR பணிகள்... தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share