×
 

எங்க வேட்பாளர்யா..! தர்மபுரிக்குச் சென்ற சௌமியா அன்புமணி... உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்..!!

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தர்மபுரிக்கு சென்ற சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பாமக சார்பில் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவியை இந்தத் தொகுதியில் களமிறக்கியுள்ளார். இது பாமகவின் பாரம்பரிய வலிமை மிக்க தொகுதியாகக் கருதப்படும் தர்மபுரியில் கட்சியின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட 15 தொகுதிகளில் தர்மபுரியும் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌமியா அன்புமணி அரசியல் களத்தில் புதிய முகம் அல்ல. அவர் பாமகவின் சுற்றுச்சூழல் அமைப்பான பசுமைத் தாயகத்தின் தலைவராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அன்புமணி ராமதாஸின் மனைவியாக மட்டுமின்றி, தனது சொந்த அடையாளத்துடன் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

அவரது தந்தை திருத்தணி பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் பேத்தி என்பதும், குடும்பப் பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தபோதும், அவர் தனது கல்வி மற்றும் சமூகப் பணிகள் மூலம் அறியப்படுகிறார்.சௌமியா அன்புமணியின் முதல் முக்கிய தேர்தல் அனுபவம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதலில் வேறு ஒருவர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பின்னர் அன்புமணி ராமதாஸின் முடிவால் சௌமியா அன்புமணி மாற்றப்பட்டு களமிறக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மாம்பழம் ஜுஸ் ஆகிட கூடாது..!! ராமதாஸ் - அன்புமணி விவகாரத்தில் நக்கலடித்த சுப்ரீம் கோர்ட்..!!

அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் எ. மணிக்கு எதிராக கடுமையான போட்டியை அவர் கொடுத்தார். மொத்தம் 4,08,445 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் மீண்டும் சௌமியா அன்புமணி கலம்பிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தர்மபுரிக்கு அவர் சென்றார். அங்கு கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து சௌமியா அன்புமணியை வரவேற்றனர்

இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் களமிறங்கும் அதிமுக..! பாஜக விட்டுக் கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share