மோடியை தாக்க முயற்சி?! இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்கள்?! மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ?!
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 10) மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் நரேந்திர மோடியை “நேரடியாக தாக்க” எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் பதிலுரை ஆற்ற இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் (குறிப்பாக பெண் எம்பிக்கள்) பிரதமரின் இருக்கைக்கு அருகில் சென்று அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டதாக உறுதியான தகவல் தனக்கு கிடைத்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரை அவைக்கு வரவழைக்காமல் தடுத்ததாகவும், எதிர்க்கட்சி பெண் எம்பிக்களை கேடயமாக பயன்படுத்தி இந்த திட்டம் வகுக்கப்பட்டதாகவும் சபாநாயகர் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!
இந்நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த சம்பவத்தின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகில் கூடி முற்றுகையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Congress Party is proud of the most degrading behavior by their MPs !! If we had not stopped all BJP MPs and allowed the Women MPs to confront Cong. MPs, it would have led to very ugly scene.
— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2026
We have very high consideration, to protect the dignity & sanctity of the Parliament. https://t.co/tRj5HjLKFH pic.twitter.com/aTmktk4Y7E
வீடியோவுடன் ரிஜிஜு எழுதியிருப்பது: “காங்கிரஸ் கட்சி தங்கள் எம்பிக்களின் மிகவும் இழிவான நடத்தையை பெருமையாக நினைக்கிறது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.”
இந்த வீடியோ வெளியீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் இதை மறுத்து, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறி வருகின்றன. காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளனர்.
இதனால் லோக்சபாவில் ஏற்கனவே நிலவும் அமளி மேலும் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்த நிலையில், இந்த வீடியோ மற்றும் குற்றச்சாட்டு பாராளுமன்ற வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டு உண்மையா அல்லது அரசியல் நாடகமா என்பது தற்போது நாடு முழுவதும் விவாதமாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!