×
 

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்குக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள தகுதியுடைய குறு விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் நூறு சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்து, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக கூட்டணி அரசு இன்று மாலை இமாலயத் தார்மீக வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 14,22,555 ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்கள் மிக நேரடிப் பலனைப் பெறுவார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் உயர்மட்ட உத்தியோகபூர்வ ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. என். மரிய வில்சன் மற்றும் துறை சார்ந்த முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசே 45 முதல் 60 நாட்களுக்குள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும் என்ற கறாரான வழிகாட்டுதல் உள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய இக்கட்டான நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முறுக்கேற்றும் நல்நோக்கோடும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடன்களைப் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

இதன்படி, ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் (100% தள்ளுபடி) தள்ளுபடி செய்யப்படும் வேளையில், சிறு விவசாயிகளுக்கு அதில் 50 சதவீதத் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் கடன் தொகை ரூ. 50,001 முதல் ரூ. 60,000 வரை இருந்தால் குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000-மும் சிறு விவசாயிகளுக்கு ரூ. 20,000-மும், ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரை உள்ள கடன்களுக்கு முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 15,000-மும், ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரை உள்ள கடன்களுக்கு முறையே ரூ. 20,000 மற்றும் ரூ. 10,000-மும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல், ரூ. 80,001 முதல் ரூ. 1,00,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000-மும் சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000-மும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், ரூ. 1,00,000-க்கு மேல் கடன் பெற்ற இரு தரப்பினருக்கும் தலா ரூ. 5,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இவற்றுடன், இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டத்தினால் அரசுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: கடும் தண்டனை உறுதி! கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் போனில் ஆறுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share