#BREAKING: TVK நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி...! பரபரப்பு...!
விஜய் காரை வழிமறித்த தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி மேற்கொண்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் பொறுப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பெண் தொண்டர்கள் அதிருப்தியில் பனையூருக்கு படையெடுத்தனர்.
இதன் காரணமாக பெண் பவுன்சர்கள் பனையூரில் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து சுஜாதா ஆக்னல் என்ற தற்போதைய தூத்துக்குடியின் நிர்வாகியின் பெயர் லிஸ்டில் இல்லை என்ற தகவல் வெளியானதாக தெரிகிறது. இதனால் பனையூர் அலுவலக வளாகத்தில் கண்ணீருடன் பெண் நிர்வாகி காத்திருந்தார்.
விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டிருந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி இருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவெகவில் ஐக்கியம்... செங்கோட்டையன் உறுதி...!
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அஜிதா தான் என்றும் தமிழக வெற்றி கழகம் வளர்ச்சிக்கு அஜிதா காரணமாக இருந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். என்றும் விஜயுடன் தான் பயணம் என்று கூறி இருந்தார் அஜிதா. இந்த நிலையில், அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜிதா உடல் நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: பெரியார் சமத்துவப் பாதையில் சமூகநீதியை வென்றெடுப்போம்... தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை...!