×
 

விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியான தகவல் தற்பொழுது அமைச்சர் பங்கேற்கவில்லை என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33 வது பட்டமளிப்பு விழா இன்று தமிழக ஆளுநர் அர்லேகர் தலைமையில் இன்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது அவர் பங்கேற்காமல் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியான தகவல் தற்பொழுது அமைச்சர் பங்கேற்கவில்லை என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர்  வெளியிட்ட அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு நேரடியாக 871 பேருக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார். இந்நிகழ்வின் வாயிலாக மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளனர். குறப்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரும் இந்த நிகழ்வின் வாயிலாக முனைவர் (Ph.D.) பட்டம் பெற இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இப்படிப்பட்ட தலைவரா..? "தேசிய தலைவர் விஜய்"..! மக்கள் ஏங்குறங்க... தவெக MLA பேச்சு..!

குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் அகர்வால், மும்பை மண்டல துணை காவல் ஆணையர் ராகா சுதா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பு நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி திரிவேணி உள்ளிட்டோர் முனைவர் பட்டம் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த துணை வேந்தர் சந்திரசேகர், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ராஜ்பவன் உறுதியாக உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என முன்கூட்டியே துணை வேந்தர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழைக் கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு.இராசேந்திரன் திருப்பி அனுப்பியிருந்தார். 

இன்று பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தவெக எம்.எல்.ஏ. முருகன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பாட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதால் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் எம்.எல்.ஏ.வும், அமைச்சரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share