×
 

எடப்பாடி தொகுதியில் டிவி சின்னம்..! ஆதரவு கொடுக்க விஜய் வலியுறுத்தல்..!!

எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்து டிவி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பிரச்சனை ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது. இது நடிகர் விஜய் தலைமையிலான புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் அரங்கில் முதல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்தத் தொகுதியாக அறியப்படுகிறது. இங்கு தவெக தனது வேட்பாளராக எம். அருண்குமாரை நிறுத்தியிருந்தது.

ஆனால், வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை கட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், வேட்பாளரின் மாயமான நிலை ஆகியவை இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கின. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் முதன்மை வேட்பாளராக அருண்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவுடன், பாதுகாப்பு நடவடிக்கையாக அவரது மனைவி ஏ. நித்யா என்ற மாற்று வேட்பாளரின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பரிசீலனை நாளான ஏப்ரல் 7ஆம் தேதி காலையில் அருண்குமார் திடீரென மாயமானதாக தகவல்கள் வெளியாயின. அவர் தொகுதி அலுவலகத்தில் இருந்தபோது, பின்னர் காணாமல் போனதாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் அவரது வேட்ப்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ. பிரேம்குமாரையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருச்சி மக்களே ரெடியா..? விஜய் இன்று பரப்புரை..! தொண்டர்கள் குஷி..!

நமது முழு ஆதரவுடன் களம் காணும் கூ. பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: அண்ணன் வராரு..! விசில் அடிக்க ரெடியா..? திருச்சி கிழக்கில் விஜய் நாளை பிரச்சாரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share