மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!
திருச்செந்தூர் அருகே தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வீட்டில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4000 தட்டுகள் பறிமுதல்.
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த குக்கர்களையும் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்றைய தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வைரவேல் தலைமையில் ஆறுமுகநேரி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!
அப்போது தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்இசக்கி என்பவரது வீட்டில் பரிசு பொருட்கள் பதுக்கி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அங்கு விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4 ஆயிரம் சில்வர் தட்டுகள், 16 குக்கர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!