×
 

மோடியோட ஸ்கெட்ச், அமித் ஷாவின் செக்!! ஆட்டம் காணும் ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி!!

பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முயலும் நிலையில், முதல்வர்களின் கிரிமினல் வழக்குகளை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுக்க பரபரப்பை கிளப்பியிருக்குற ஒரு புது மசோதா, பார்லிமென்ட்டில் தாக்கல் ஆகியிருக்கு! இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 20-ம் தேதி தாக்கல் பண்ணாரு. இதன்படி, பிரதமரோ, முதலமைச்சரோ, மத்திய அல்லது மாநில அமைச்சர்களோ, 5 வருஷத்துக்கு மேல தண்டனைக்குரிய கிரிமினல் வழக்குல 30 நாள் தொடர்ச்சியா சிறையில் இருந்தா, பதவி தானா பறிக்கப்படும்னு சொல்றது. 

இதை ஆகஸ்ட் 22-ம் தேதி பீகாரில் பேசின பிரதமர் மோடி, “இனி சிறையில இருந்து ஆட்சி நடத்துறது முடியாது. ஜனநாயகத்தை காப்பாத்தவும், ஊழலை ஒழிக்கவும் இந்த மசோதா கொண்டு வந்திருக்கோம்”னு தெளிவா சொல்லியிருக்காரு.

இந்த நேரத்துல, ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) வெளியிட்ட ஒரு அறிக்கை, நாட்டுல உள்ள முதலமைச்சர்களில் 40% பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்குன்னு அதிர்ச்சி தர்றது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது 89 வழக்குகள், அதுல 72 வழக்குகள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ தண்டனைக்குரியவை. இவருக்கு அடுத்த இடத்துல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 47 வழக்குகளோடு இருக்காரு, இதுல 11 வழக்குகள் BNS-கீழ் தண்டனைக்குரியவை. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி ஜப்பான், சீனா பயணம்!! 7 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! அமெரிக்காவுக்கு ஆப்பு?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது 13, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது 5, மகாராஷ்டிராவோட தேவேந்திர ஃபட்னவிஸ், இமாச்சல பிரதேசத்தோட சுக்விந்தர் சிங் சுகு மீது தலா 4 வழக்குகள், கேரளாவோட பினராயி விஜயன் மீது 2, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது ஒரு வழக்கு இருக்குன்னு ADR அறிக்கை சொல்றது. இந்த வழக்குகள்ல கொலை முயற்சி, ஆட்கடத்தல், ஊழல் மாதிரியான கடுமையான குற்றச்சாட்டுகளும் இருக்கு.

இந்த மசோதா, ஜனநாயகத்தை பலப்படுத்துறதுக்கு, ஊழலை ஒழிக்குறதுக்கு கொண்டு வந்ததா மோடி-அமித் ஷா சொன்னாலும், எதிர்க்கட்சிகள் இதை “எதிர்க்கட்சி முதலமைச்சர்களை குறிவைக்கிற மோசமான திட்டம்”னு கடுமையா எதிர்க்குது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது கருப்பு மசோதா! 30 நாள் கைது ஆனாலே முதலமைச்சர் பதவி பறிக்கப்படும். 

விசாரணையோ, தீர்ப்போ இல்லாம இது ஜனநாயகத்துக்கு எதிரானது”னு எக்ஸ்-ல கடுமையா விமர்சிச்சிருக்காரு. காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, “இந்த மசோதா எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைக்கிறது. ஆளுங்கட்சி முதலமைச்சர்கள் மீது வழக்கு வராது, ஆனா எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் எளிதா கைது செய்யப்பட்டு பதவி பறிக்கப்படலாம்”னு குற்றம்சாட்டியிருக்காரு.

இந்த மசோதா, 130-வது அரசியல் சாசன திருத்தமாக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதான்னு மூணு மசோதாக்களா தாக்கல் ஆகியிருக்கு. இவை ஒரு கூட்டு பார்லிமென்ட் கமிட்டிக்கு அனுப்பப்படும். 

ஆனா, இந்த மசோதாக்கள் குறித்து முழு விவாதம் இல்லாம, கடைசி நிமிஷத்துல தாக்கல் செய்யப்பட்டதால, எதிர்க்கட்சிகள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, மசோதாக்களை கிழிச்சு எறிஞ்சு போராட்டம் பண்ணாங்க. இதுக்கு முன்னாடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 2024-ல டெல்லி மதுபான கொள்கை வழக்குல கைது ஆகி, சிறையில் இருந்து ஆட்சி நடத்த முயற்சி பண்ணது இந்த மசோதாவுக்கு ஒரு உதாரணமா பார்க்கப்படுது.

இந்த மசோதா, ஜனநாயகத்தை காப்பாத்துமா இல்ல எதிர்க்கட்சிகளை ஒடுக்குறதுக்கு ஆயுதமா மாறுமான்னு பெரிய கேள்வி எழுந்திருக்கு. மு.க.ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி மாதிரியான முதலமைச்சர்களோட பதவிக்கு இது ஆபத்து ஏற்படுத்தலாம்னு எதிர்க்கட்சிகள் கவலைப்படுது. 

இதையும் படிங்க: 5 வருஷம் தான் டைம்.. இனி வருஷத்துக்கு 50 ராக்கெட் ஏவணும்! பிரதமர் மோடி டார்கெட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share