×
 

உக்ரைன் கொடுத்த மரண அடி.. வெளவெளத்துபோன ரஷ்யா.. 40 போர் விமானங்கள் சிதைப்பு..!

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 40போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 180 வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: புடினுக்கு பைத்தியம் பிடித்து விட்டது..! கோபத்தில் கொந்தளிக்கும் ட்ரம்ப்.. 3ம் உலகப்போருக்கு அடிபோடுகிறதா அமெரிக்கா..!

அதேவேளை, 15ம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், புதின் அழைப்பை உக்ரைன் ஏற்றது.

அதன்படி, துருக்கியின் அங்காராவில் உக்ரைன், ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். ஆனால் ரஷ்யா தரப்பில் அதிபர் புதினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழு பங்கேற்றது. 

சுமார் 2 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு கைதிகளை பரிமாறி கொள்வதில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நேற்று சுமி மாகாணத்தில் பஸ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போர் நடந்து கொண்டு உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில் 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.


இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது உறுதிப்படும் பட்சத்தில், ரஷ்யா தாக்குதலை துவக்கிய பிறகு, அந்நாட்டின் முக்கிய ராணுவ தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் முக்கியமானதாக இது இருக்கும்.

இதையும் படிங்க: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை.. 273 ட்ரோன்களை அனுப்பி உக்ரைனை சிதைத்த ரஷ்யா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share