"கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார்.
வி. பி. சிங் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 11 மாத ஆட்சியில் 30 ஆண்டு காலத் திட்டத்தை நிறைவேற்றியவர் வி பி சிங் என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதிக்காக திமுக அரசை எதையும் செய்யவில்லை என்ற குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் மாண்பை தமிழக வெற்றிக்கழக அரசு பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வரலாற்றில் முதல்முறையாக சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆளு கட்சியை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது எதிர்க்கட்சி என்றும் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியையும் மீறி திமுகவினர் கேலி, கிண்டல் என்று செய்தனர் என்று தெரிவித்துள்ளார். எங்கள் கொள்கைக்கு எதிராக எதிர்கட்சியினர் பேசும் போது மட்டுமே நாங்கள் குறுக்கிட்டோம் என்றும் கூறினார்.
முதலமைச்சர் விஜய் பேச மாட்டார் என தவறான தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சி செய்ததாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் தவறான தகவல்கள் கூறும்போது அதனை மட்டுமே எதிர்த்து பேசினோம் என்று தெரிவித்தார். மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் சட்டமன்றம் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சரை குறித்து எதிர்க்கட்சிகள் நையாண்டியாக பேசியது பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று கூறினார். சட்டமன்றத்தில் கட்சி நிதி என்று பேசிய உடன் திமுகவினர் எழுந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!
ஆ ராசா உரிமையில் பேசுவதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்துள்ளார். தனக்கு கீழ் இருப்பவர்களை வைத்து உரிமையில் பேச வைக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். திட்டங்களை தீட்டி அதன் மூலம் ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம் என்றும் தெரிவித்துள்ளார். 32 துறைகளில் 16 சபரீசனுக்கு, 16 உதயநிதி ஸ்டாலினுக்கு என பிரித்த ஊழல் செய்திருப்பதாக திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!