×
 

மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!

ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சமீபத்திய பரபரப்பான விவகாரமாக உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த முடிவு அதிமுக தொண்டர்கள் மற்றும் சில தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி வலுப்பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது 2021 தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த 20 தொகுதிகளை விட ஏழு அதிகம்.

பாஜகவின் இந்த அதிகரிப்பு கூட்டணியில் அதிமுகவின் மேலாண்மையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டாலும், சில தொகுதிகளின் ஒதுக்கீடு உள்ளூர் மட்டத்தில் பிரச்சனையாக மாறியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது பாஜக வேட்பாளர் டி. குப்புராமு தோல்வியடைந்தார். இப்போது என்டிஏ கூட்டணியில் இந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது, உள்ளூர் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான தென் மாவட்டங்களில், குறிப்பாக ராமநாதபுரம் போன்ற இடங்களில், பாஜகவுக்கு இடம் கொடுப்பது தங்கள் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுகவினர், ராமநாதபுரம் தொகுதி அதிமுகவுக்கே உரியது என்றும், இங்கு பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் உள்ளூர் வாக்குகள் பிளவுபடும் என்றும் கூறுகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் களமிறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினர் போஸ்டர் ரொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம் என்று கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கடலில் செயற்கை பவளப்பாறைகள்... பணியை மும்முரமாக தொடங்கிய மீன்வளத் துறை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share