×
 

தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

திருமங்கலத்தில் போட்டியிடும் ஆர் பி உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் பை பை ஸ்டாலின் என தனது உரையை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி


திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்காணூரணியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக இரட்டை இலை வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்tடார். திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஆர்.பி. உதயகுமார் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.இருவரும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் .இந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது இந்த மண்ணில் பேசுவதை பெருமைக்குரியது.

அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதிமுக குடும்பத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி. நாட்டு மக்களுக்கு என்னென்ன தேவையான திட்டம் போட்டு மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்.திமுகவினர் குடும்பத்திற்கு தேவையான திட்டங்களை போட்டு குடும்பம் செழிக்க திட்டங்களை தீட்டுகின்ற கட்சி. எம்ஜிஆர் தீய சக்தி திமுக கை வேரோடு அழைக்க வேண்டும் என்ற சபதம் எடுத்தார் அதை நிறைவேற்றுவீர்களா?.  எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்தார். இரு தலைவர்களுக்கும் நாம் தான் பிள்ளைகள்.நமக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம் தலைவர்கள். ஆனால் குடும்பத்திற்காக வாழ்ந்து மறைந்த தலைவர் கருணாநிதி.

நம் தலைவர்கள் மக்களுக்கு என்னென்ன திட்டம் என செயல்பட்டு திட்டம் தீட்டி மக்களுக்கு கொண்டு சேர்த்த காரணத்தினால் தான் இருவரும் தலைவர்கள் மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - அவர்களின் ஆசியோடு தான் நம் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.நம் கட்சியை உடைக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டது ஆனால் அவை அனைத்தையும் தொண்டர்கள் தூள் தூளாக்கிவிட்டனர் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

நாம் வைத்த கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றி கூட்டணி.நடைபெறுகிற சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.  பள்ளிக்கூடத்தை , கல்லூரிகளை திறந்தது அதிமுக ஆட்சி பள்ளிக்கூடத்தை மூடிய ஆட்சி திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் மின் கட்டணம் வீட்டு வரி கடை வரி குடிநீர் வரி குப்பை வரி அனைத்தும் உயர்ந்துள்ளது விலைவாசி உன்னை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது .மக்கள் வாங்கும் சக்திக்கு முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி வந்த உடன் தமிழகத்தில் கஞ்சா அரவோடு அழிக்கப்படும்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத்தாருக்கும் 10 ஆயிரம் ரூபாய் பிறப்பு உதவித்தொகை வங்கி கணக்கில் வரவைக்கப்படும். குடும்பத் தலைவி அனைவருக்கும் 2000 ரூபாய் பிரிட்ஜ்வேலைக்கு செல்ல மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் 25 ரூபாய் மூன்று சிலிண்டர்கள் ஆண்டுக்கு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி போடப்படும் விலையில்லா பருப்பு விலை,இல்லா எண்ணெய் வழங்கப்படும்.  ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி பெற்று நடந்தால் போட்டி நடத்துவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு உதவித் தொகை 10 லட்சம் வழங்கப்படும்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான காப்பீடு தொகையை அரசாங்கமே செலுத்தும்


காளைகள் பதிவு செய்யும் ஆன்லைன் முறை பழைய முறையில் செயல்படுத்தப்படும் எடப்பாடி.


 

இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share