×
 

உதய் சோசியல் மீடியாவில் கிளுகிளுப்பு படங்கள்... "சொந்த மகனை திருத்த துப்பில்ல..." - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்...!

எஸ்ஐஆர் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு ஜன்னி வந்துவிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்.

தமிழகத்தில் பெருகி வரும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை,  போதைப்பொருள் கலாச்சாரம் சட்ட ஒழுங்கை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை முன்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு, கஞ்சா போன்றவை வராத நாட்களே இல்லை சட்ட ஒழுங்கு சரியில்லை. அந்த துறைக்கு அமைச்சராகவும் முதல்வராகவும் உள்ள ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்.  போதையை கட்டுபடுத்த ஏன் தயங்குகிறார், குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் அச்சப்படுகிறார், ஏன் தூங்கி கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பினார். 

பல பேர் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அங்கொன்றும் இன்கொன்றும் நடைபெற்று கொண்டிருக்க, குற்ற செயல்களில் நடவடிக்கை எடுக்கும் போது அச்சப்படுவார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி நூறு கிராம் கஞ்சா பிடித்தது போய் நூறு கிலோ கஞ்சா பிடிபடுகிறது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு "டாடா " காட்டப் போகிறாரா எடப்பாடி?... ராஜேந்திர பாலாஜி சூசக பேச்சால் சர்ச்சை...!

திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் மூன்றாயிரம் கோடிக்கு திமுக நிர்வாகி ஜாபர் ஜாதீக் போதை மருந்து விற்பனை செய்துள்ளார். கஞ்சா போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு பயமில்லை, பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யபடுகிறது . அரிசி பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது என கூறினார். 

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்கள் ஆனால் தீபாவளியை மட்டும் கொண்டாடுவார்கள். துணை முதல்வருக்கு என்று கொடுக்கப்பட்ட சமூக வலைதளத்தில் மதி மயங்கி கிளு கிளுப்பான படங்களை உதயநிதி பதிவிடுகிறார்.சொந்த மகனையே திருத்த முடியாத முதலமைச்சர் கிட்ட போய் நாட்டை திருத்து என்றால் எப்படி செய்வார்? என கேள்வி எழுப்பினார். 

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். இது இங்கு மட்டும் அல்ல திருவண்ணாமலையில் தாயின் கண்னெதிரே மகள் கற்பழிக்கப்பட்டிகிறாள், பள்ளிக்கு செல்லும் மாணவிக்கும் பாதுகாப்பு இல்லை வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லை எல்லாம் கஞ்சா போதையில் கற்பழிக்கபடுகிறார்கள், யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறைக்கே அச்சமில்லை என சகட்டு மேனிக்கு சாடினர்.

திமுகவில் தனக்கு பிறகு யாரும் வரக்கூடாது. தன் குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்ற எண்ணத்தால், திறமை இல்லாத, ஆர்வம் இல்லாத உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளார். கலைஞர் கருணாநிதியை பாராட்டலாம் அவர் இறக்கும் வரை ஸ்டாலினுக்கு தலைவர் பதவியும், முதலமைச்சர் பதவியும் வழங்கவில்லை.

அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்பதால் பித்தலாட்டம், தில்லுமுல்லு வேலையை திமுக அரசு செய்து வருகிறது. இறந்தவர்கள் வாக்குகளை போட்டு வெற்றி பெற்ற திமுக அரசுக்கு தேர்தல் ஆணையம் எஸ்ஐஆரை அமைத்தவுடன் ஆப்பு வைத்தது. அதனால் தான் எஸ்ஐஆர் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு ஜன்னி வந்துவிடுகிறது. தேர்தல் ஆணையத்தில் எஸ்ஐஆரை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கூறியது. ஏனென்றால் எங்களுக்கு எஸ்ஐஆரைக் கண்டு பயமில்லை.

இதையும் படிங்க: முதுகில் குத்திய அதிமுக நிர்வாகிகள்... விஜயபிரபாகரன் தோல்விக்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்து கே.டி.ஆர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share