×
 

“ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

ஊர் ஊராக சென்று அதிமுகவை பற்றியும், எடப்பாடியாரை பற்றியும் பொய் பிரச்சாரமாக  ஊளையிட்டு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிகை விடுத்துள்ளார். 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடர்ந்து வரலாற்றை திருத்தி ஒரு கோயம்பல்ஸ் பிரச்சாரத்தை பன்னீர்செல்வம் பேசி வருகிறார். 
பதவி சுகத்திற்காகவும் அதிகார பசிக்காகவும், ஸ்டாலினை புகழ் பாடி அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பதவி பட்டங்களையும், அதிகார சுகத்திற்காக இதுபோன்று புகழ் பாடுவது பற்றி பேசுவது எங்களுக்கு கவலை இல்லை. 

ஆனால் பன்னீர்செல்வம் பதவி, பட்டம் பெறுவதற்கு அதிமுக வரலாற்றை திருத்தி கூறுகிறீர்கள். இன்றைக்கு அதிமுகவில் எந்த பதவி சுகத்தையும் எதிர்பார்க்காமல் தன் உயிர் போகும் வரை அதிமுக கொடி படர வேண்டும் என்ற இருக்கும் அதிமுக தொண்டர்களின் எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.  அதிமுகவில் கட்சி பதவியை அனுபவித்து கொண்டு இன்றைக்கு அதே அதிமுகவை அளிப்பேன் சபதம் ஏற்று ஊர் ஊராக ஊளையிடும் வரும் நீங்கள் என்னை பார்த்து என்ன தகுதி, யோகிதை உள்ளது என்று நீங்கள் பேசி உள்ளீர்கள் .எனக்கு என்ன தகுதி உள்ளதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். 

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆன்மா பார்த்துக் கொண்டு வருகிறது. உங்களுக்கு உரிய பதிலை சொல்லும். அதிமுகவை அழிப்பதற்கும், அடமான வைப்பதற்கும் நீங்கள் முயற்சி எடுத்து வந்தீர்கள்‌ அதை தடுத்து இன்றைக்கு அதிமுகவை உயிரோட்டமாக, மக்கள் செல்வாக்கு உடன் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார் அவரைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது .

இதையும் படிங்க: இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

புரட்சித்தலைவி அம்மா தன் உடல்நிலை பற்றி கூட அக்கறைப்படாமல் தன் உயிரைக் கொடுத்து 234 தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வெற்றி வாகை சூடிய அம்மாவின் அரசை, அம்மா இறந்த பின்பு  இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று எடப்பாடியார் முயற்சித்தபோது, சட்டமன்றத்தில் அதற்கு எதிராகத்தான் நீங்கள் வாக்களித்து துரோகம் செய்தீர்கள். 

அதிமுக என்ற ஆல மரத்தின் வளர்ச்சிக்கு ஒரு செம்பு தண்ணீரை கூட நீங்கள் ஊற்றவில்லை. தற்போது தேர்தலுக்கு முன் ஊர் ஊராக சென்று ஊளையிடும்  நீங்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று எத்தனை தொகுதிகள் நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள். உங்கள் சொந்த மாவட்டத்தில் வீராதி வீரன் என்று பேசுகிறீர்கள்? எத்தனை தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற்று தந்தீர்கள?.  அந்த விவரத்தை நீங்கள் மக்களுக்கு சொன்னால் உங்கள் லட்சணம், யோகிதை, துரோகம் என்று மக்களுக்கு நன்றாக தெளிவாக தெரியும். அதை உங்கள் வசதிக்காக மூடி மறைத்து விட்டீர்கள். 

அதிமுகய பற்றியும், எடப்பாடியாரை பற்றியும் இல்லாத இட்டுக்கதை சொல்லி அதிமுகவை காட்டி கொடுத்து போய் விட்டீர்கள். நீங்கள் சென்ற இடத்தில் புலவராக பாடி பரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு கைவந்த கலை. உங்கள் கண் முன் நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக ஆட்சி அமைப்பார். தேசிய கொடியை ஏற்றுவார். அப்போது நீங்கள் தமிழகத்தில் தான் இருப்பீர்கள், அவசரப்பட்டு வார்த்தையை அள்ளி விடாதீர்கள். அது உங்கள் பதவிக்கும், வயதிற்கு உகந்ததல்ல. 

இன்றைக்கு வரலாற்றை திரித்துக் கூறி எடப்பாடியார் மீது அவதூறுகளை அள்ளித் திரித்து  கூறி வருகிறீர்கள். இதனால்உண்மையான அதிமுக விசுவாச தொண்டர்களின் எதிர்வினைக்கு நீங்க எதிர்கொள்ள வேண்டியது  இருக்கும். நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டால் நாங்களும் எதிர்வினை ஆற்றுவோம். ஆகவே பிரச்சார வியூகத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் ஸ்டாலினை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பாடலாம் இந்த போலி நாடகத்தை மக்கள் ஒருபோது நம்ப மாட்டார்கள் என கூறினார். 

இதையும் படிங்க: ஓபிஎஸை இதுக்கு மேல யாராலும் அவமானப்படுத்த முடியாது... மேடையிலேயே ஆர்.பி. உதயக்குமார் செய்த காரியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share