“செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!
இருபெரும் தலைவர்களிடம் விலாசத்தை பெற்றவர்கள் இன்றைக்கு கூலிப்படையாக மாறிவிட்டார்கள். ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை எழுப்பியவர்கள் செல்ல காசாக போய்விட்டார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாமானிய ஏழை, எளிய மக்களுக்காக இந்த மக்கள் இயக்கத்தை 17.10 .1972 ஆம் ஆண்டில் தொடங்கினார் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு, புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிகள் இரட்டை இலையை நிற்க வைத்துமாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அதிமுகவை மீட்டெடுத்து ,இரட்டை இலையை மீட்டெடுத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்டெடுக்க எழுச்சி பயணத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார் .
ஸ்டாலின் தலைமையில் மன்னராட்சி ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய் களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார். சாமானிய மக்களுக்காக உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார், இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு... இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்...!
எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர், பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசைப்பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் அவர்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்றைக்கு பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடியார் திகழ்ந்து எதிரிகளுக்கும், துரோகிகளும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்றைக்கு இருபெரும் தெய்வங்களின் செல்வாக்கால் எதிரிகளிடம் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார் .இதனால் இன்றைக்கு எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது .தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார் .இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றார்கள் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அதிமுகவை சேதாரத்தை ஏற்ப்பட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டியதருணம் இது. இன்றைக்கு தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்த பொழுது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடியார். அவர் கருத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் இன்றைக்கு தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார் இதுதான் ஜனநாயகத்தின் அற்புதம் ஜனநாயகத்தின் வளர்ச்சியாகும். இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள் சர்வாதிகளால் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை அதே போல அவர்களுக்கு துணையாக இருக்கும் கருங்காலிகளும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை இதுதான் வரலாறு .
இன்றைக்கு அதிமுகவிற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார் அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகளுக்கும் அது அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மனம் உறுதியோடு, விசுவாசத்தோடு எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும். சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழுத்து ஏறிய வேண்டும்.மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும என கூறினார்.
இதையும் படிங்க: "நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்... " - பாடல் வரிகளால் பதிலளித்த செங்கோட்டையன்... எதற்கு தெரியுமா?