×
 

“தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக வந்ததே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். எடப்பாடியாரை நம்புகிறேன்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என ஆறு சட்டசபை தொகுதிகள் குமரி மாவட்டத்தில் உள்ளன. தற்போது கன்னியாகுமரி அ.தி.மு.க வசமும், நாகர்கோவில் பா.ஜ.க வசமும், பத்மநாபபுரம் தி.மு.க வசமும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் உள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் மீண்டும் தளவாய்சுந்தரம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி கடந்த தேர்தலைப்போன்று தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை போட்டியிட்ட ஆஸ்டின் இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தாமரை பாரதி, ஒன்றிய செயலாளர் பாபு, வழக்கறிஞர் அணி சரவணன், இளைஞரணி அகஸ்தீசன் என பலரும் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதுகின்றனர். நா.த.க சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் கன்னியாகுமரியில் உள்ள 5 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவுக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ வாக இருந்தேன்.அநியாயமாக ஏன் மீது போக்சோ பொய் வழக்கு போட்டது தளவாய் சுந்தரம் தான். கடந்த  மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் ஆளே இல்லை.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக வந்ததே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். எடப்பாடியாரை நம்புகிறேன். தளவாய் சுந்தரம் தான் எடுப்படியார்க்கு துரோகம் செய்து வருகிறார். 6 தொகுதியில் 5 தொகுதியை எப்படி ஒதுக்குகிறார்கள். நாகர்கோவிலில் அதிமுக படுத்து கிடந்து வெற்றி பெறலாம்.

80 சதவீதம் நாடார் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு  வாய்ப்பு வழங்க படுகிறது. தளவாய் சுந்தரம் துரோகம் செய்துவிட்டார். கன்னியாகுமரி தொகுதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்.

தளவாய் சுந்தரத்தை விட 1 ஓட்டு குறைவாக எடுத்தால் நான் தூக்கில் தொங்குவேன். எடப்பாடியார் என்னை கூப்பிட வில்லை. பணம் செலவு பண்ணோம் ஆனால் மதிக்கவில்லை.

இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share