இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள் - அதிமுக காளியம்மாள் ஆவேசம்...!
வருகின்ற இடைத்தேர்தலில் த.வெ.க விற்கு மக்கள் விசில் ஊத மாட்டார்கள் சங்கு தான் ஊதுவார்கள்
முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் ஆவேசம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் இன்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் கலந்து கொண்டு பேசினார்:
அவர் பேசும்போது:- தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்துள்ள இந்த ஆட்சியைப் பற்றி நூறு நாட்கள் பேசக்கூடாது என்று தான் இருந்தோம் ஆனால் அவர்களே பேசுவதற்கு எடுத்துக் கொடுத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!
தமிழகத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றும் பெண்களும் இளைஞர்களும் மாற்றம் வேண்டும் என்று கொண்டு வந்த இந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும்,
ஆனால் அதிமுக ஆட்சி வந்திருந்தால் முதியோர்களுக்கு உதவித் தொகையும் பெண்களுக்கு உரிமை தொகையும் தேர்தல் நேரத்தில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால் தற்போது எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் என்ற பெயரில் ஸ்டிக்கர் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மின்சார கட்டண முதல் பல்வேறு கட்டணங்கள் உயர்ந்து விலைவாசி உயர்ந்துள்ளதே தவிர வேற எதுவும் நடக்கவில்லை என்றும், தொழில் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்றும்,
பெண்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் ஜெயலலிதா அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஆட்சிக்கு வந்தார். மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் காலத்தில் பெண்கள் அவருக்கு தங்கையாக அக்காவாக ஏன் பொண்டாட்டியாக கூட இருப்பேன் என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் வாழ்வியல் முறையை பற்றி கவலைப்படாமல் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்வியல் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.
இளைஞர்களை தவறான வழிகளுக்கு கொண்டு செல்லும் நிலை தான் உள்ளது என்றும் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்தும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத இந்த ஆட்சியாளர்களுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் விசில் ஊத மாட்டார்கள் சங்கு தான் ஊதப் போகிறார்கள். மீனவர்கள் வசிக்கும் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டப் போவதாக தொடக்கூடாத இடத்தில் முதல்வர் தொட்டுவிட்டதால் இனி நடக்க போவதை பாருங்கள் என்று பேசினார்.
இதையும் படிங்க: முதல்வரின் பயணம் முதலீட்டை ஈர்க்கவா.? இன்ப சுற்றுலாவா.? விமர்சித்த EPS..!!