எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!
விஜய் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரே வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், அதிமுகவின் மருத்துவ பிரிவில் துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது தந்தை செ. முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவின் செயலாளராகவும் அவைத் தலைவராகவும் பணியாற்றிய பின்னணி, அவருக்கு அரசியல் வாய்ப்புகளை வழங்கியது. 2016 சட்டமன்றத் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எச். ஜவாஹிருல்லாவை தோற்கடித்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது அரசியல் பயணத்தில் முதல் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமித்தார். இது அவருக்கு முதல் அமைச்சர் பதவி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் அவர் தொடர்ந்து அமைச்சராக இருந்தார். ஆனால், 2019 ஆகஸ்ட் 7 அன்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராமநாதபுரம் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் மணிகண்டன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி தலைமையைச் சேர்ந்தவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். யோசித்து முடிவை சொல்கிறேன் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!