#BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!
அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் தனித்து பெரும்பான்மையை எட்டாத நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்த பின்னணியில் அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவுக்கு ஆதரவு அளித்த சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ கு. மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மூன்று பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்கள் அதிமுக சார்பில் 2026 தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் ராஜினாமா அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உடைவு மற்றும் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் போக்கை பிரதிபலிக்கிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தபோது, அதிமுகவின் ஒரு பிரிவினர் குறிப்பாக எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் ஆர்வம் காட்டினர். இந்த மூன்று எம்எல்ஏக்களும் அந்தக் குழுவுடன் இணைந்து செயல்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களின் ராஜினாமா தவெகவில் இணையும் நோக்கத்துடன் இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. இது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!
இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் உள்ளடி மோதல்கள் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், எம்எல்ஏக்களின் ராஜினாமா இடைத் தேர்தல்களுக்கு வழிவகுக்கும். தவெக ஆட்சிக்கு இது கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததன் மூலம் அதிமுகவின் பலம் 44 ஆக குறைந்தது.
இதையும் படிங்க: ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!