மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!
முதல் மனைவிக்கு தெரியாமல் வனிதா (58) என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம் செய்து கொண்ட வழக்கில் முன்னாள் அதிமுக எம்பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது
இந்த வழக்கில் தனக்கு அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும்
பிணை கோரியும் மேல் முறையீடு செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள் 10,000 பிணைப்பத்திரத்துடன் பிணை அளித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை 30 நாட்கள் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், ஆண்டரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்.எஸ்.ஜெகநாதன் (69). இவர் கடந்த 1977 ம் ஆண்டு அதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவருக்கு லலிதா (63) என்ற மனைவியும் சடகோபன், மதன் ஆகிய 2 மகன்களும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!
இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் வனிதா (58) என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது கணவரான முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதன் தனக்குத் தெரியாமல் 2 வதாக வனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி லலிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதன் மற்றும் 2 வது மனைவி வனிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத் முன்னாள் எம்பி என்.எஸ்.ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் பினை வழங்கமாறு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றதால்
அவருக்கு நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைத்தும்
10 ஆயிரம் பிணைப்பத்திரம் உடன் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது,
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!