×
 

ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசியதாக அதிமுக தெரிவித்துள்ளது.

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இழிவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படிப் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது என்றும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது

.சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த ஏறு தழுவுதல் பற்றி புரிதல் இல்லாமலா அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்தப் பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!

ஜல்லிக்கட்டிற்குத் தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான முதல் பார்வையாகத் தனது எம்.எல்.ஏ.வைப் பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது. தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சுக்கு முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

 

 

இதையும் படிங்க: நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share