புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..
தரகர் வேலை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் குலத் தொழிலாக இருக்கலாம் என அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எடுத்து பிரசாத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தவறு செய்த தங்களது கட்சி நிர்வாகியை நீக்கம் செய்த சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில் கூறியுள்ளதாவது; தவறு செய்தவர்களாக யார் கருதப்பட்டாலும், அவர்களை கட்சி நீக்கம் செய்துவிடும் என்பதை நேற்றே கூறிவிட்டோம்., இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் அடிப்படையில், குறிப்பிட்ட நபரின் நீக்கத்திற்கு இன்று காலையே மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், நீக்கத்திற்கான அறிக்கையும் வெளிவந்துவிட்டது.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை... சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி!!
இருந்தாலும், இந்த கேள்வியெல்லாம் கேட்க திமுக குடும்ப கால் கழுவி கொத்தடிமைகளுக்கு என்ன அருகதை இருக்கிறது? அரக்கோணத்தில் திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்தது உதயநிதிக்கு சப்ளை செய்யவா? ஜாபர் சாதிக் போதைப்பொருள் மாபியா நடத்தியது உதயநிதிக்கு சப்ளை செய்யவா? தரகர் வேலையெல்லாம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் குலத் தொழிலாக இருக்கலாம்.அதற்கு சில அல்லக்கைகள் துணையாக இருக்கலாம்.
காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல், திமுக ஐடி விங்கின் 12-ஆம் கட்ட ஏவல்களுக்கு அரசியலுக்கு தொடர்பே இல்லாத கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் குடும்பத்தாரை எப்படி வம்பு இழுக்கலாம் என்பதே முழுநேர வேலையாக உள்ளது. அது சரி... அம்பை எய்வான் ஏன்? பிஸ்கட் போடும் முதலாளி அப்படி! உங்களுக்கு தான் நரேடிவ் செட் பண்ண வர்லைல்ல கொத்தடிமைகளா? எதுக்கு இவ்ளோ முக்கிட்டு இருக்கீங்க? ஆளுங்கட்சியான திமுக முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கட்டும்.
தன்னுடைய திறமையின்மையின்மையை மறைக்க எதிர்க்கட்சியான அஇஅதிமுக மீது இவர்கள் கட்டவிழ்த்துவிடும் அவதூறுகளை, இவர்கள் இயலாமையின், தோல்வி பயத்தின் வெளிப்பாடாக மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள். இவ்வாறு அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!