×
 

மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு போடக்கூடிய முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்காக இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி  பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைத்தப் பிறகு பெரும்பான்மையை நிரூப்பிப்பதாக விஜய் பொறுப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விஜய் இரண்டு முக்கிய திட்டங்களில் முதலில் கையெழுத்திட இருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. அதில்  “வெற்றி பயண திட்டம்”, அதாவது தமிழ்நாடு முழுவதும் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய வகையில் அனைத்து விதமான அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான திட்டத்தில் கையெழுத்திட  இருக்கிறார் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது விஜய்  ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். அதாவது தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் விஷயமாக என்ன இருக்கும் என்றால் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பிங்க் பேருந்து நகர பேருந்துகள் பொறுத்தவரையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது எப்போதாவது ஏதாவது ஒரு பேருந்து தான் வருகிறது. அதனால் பெண்கள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள்  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இலவச பயணம் என்று அறிவித்து விட்ட பிறகு அது அனைத்து பேருந்துகளுக்கும் இருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கு செல்வதாக இருந்தாலும் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாக இனி பெண்கள் பயணிக்கலாம் எனக்கூறியிருந்தார். எனவே முதலமைச்சராக பதவியேற்ற பிற்கு அந்த திட்டத்தில் விஜய் முதலில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

அதேபோல இரண்டாவதாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தில் விஜய் கையெழுத்திடப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நடைமுறையில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனை மாற்றி முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன என்று விசாரித்த போது, தவெகவிற்கு அதிக அளவிலே பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில பெண்களுக்கு அனைத்து அரசு  பேருந்துகளும் இலவசமாக கொடுத்தால் அது பெரிய அளவிலே அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

அதேபோல அனைத்து குடும்பங்களும் முதலில் பயன்பெறக்கூடிய வகையில் ஒரு திட்டம் இருக்க வேண்டும். எனவே அந்த அடிப்படையில் ஏற்கனவே திமுக ஆட்சியிலே மூன்று முறைக்கு மேல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கிறது. எனவே 200 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கும் போது அது அனைத்து தரப்பு குடும்பங்களுக்கும் ஒரு நன்மை பயக்கக்கூடிய முதல் திட்டமாக இருக்கும். எனவே இந்த இரண்டு திட்டங்களும் முதலில் கொண்டுவரப்படும் என்று தமிழக வெற்றி கழகத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 
 

இதையும் படிங்க: "தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share