×
 

கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தே.மு.தி.க., வர மறுத்தால், அக்கட்சியை உடைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க உள்ள நிலையில், கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) இணைவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

ஆனால், தேமுதிக தரப்பு அதிக தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கோருவதால் பேச்சு இழுபறியாக உள்ளது. இந்நிலையில், தேமுதிக கூட்டணிக்கு வர மறுத்தால், அக்கட்சியை உடைக்க அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ரகசிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டணி கூட்டத்தில், தேமுதிக நிர்வாகிகளை மேடை ஏற்றி பேச்சு நடத்தப்பட்டது. அப்போது 8 தொகுதிகள் தருவதாக அதிமுக - பாஜக தரப்பு உறுதி அளித்தது. 

இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு?!! சாத்தியமா? வேணாமா? எடப்பாடி தீவிர டிஸ்கஷன்!

ஆனால் தேமுதிக 16 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரியது. இந்த கோரிக்கையை அதிமுக - பாஜக தலைமைகள் நிராகரித்தன.

இதையடுத்து, திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க முயற்சி நடந்தது. திமுகவின் மகளிர் அணி செயலர் கனிமொழி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துடன் நேரடியாக பேசப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகள் தருவதாகவும், வெற்றி பெற்றால் ராஜ்யசபா சீட் தருவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தேமுதிக ராஜ்யசபா சீட்டில் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் திமுக கூட்டணி பேச்சும் தேக்கமடைந்துள்ளது.

இப்போது அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் அதிர்ச்சி தருகிறது. தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால், அக்கட்சியை பிளவுபடுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி இளங்கோவன் மூலம் தேமுதிக முக்கிய நிர்வாகிகளிடம் தொடர்பு கொள்ளப்பட்டு, அதிர வைக்கும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. 

மேலும், கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சந்தித்து பேசினார். “தேமுதிக ஒன்றாக இருந்து செயல்படுவதையே பாஜக விரும்புகிறது” என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

தேமுதிக தற்போது தனித்து நிற்கும் நிலையில், அதன் வாக்கு வங்கி இரு பெரும் கூட்டணிகளுக்கும் முக்கியமானது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் தலைமையில் கட்சி வலுவாக உள்ளது. ஆனால் உள் பிளவு ஏற்பட்டால், தேர்தல் களம் மாறுபடும். 

அதிமுக - பாஜக இந்த வியூகத்தால் தேமுதிகவை அழுத்தம் கொடுத்து கூட்டணிக்கு இழுக்க முயல்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ரகசிய திட்டம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக இறுதியில் எந்த பக்கம் சாயும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் தேவையா? திமுக எதிர்ப்பு! ஓட்டமெடுக்கும் திருமாவளவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share