"வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!
நடிகர் அஜித்குமாரின் தாயார் மரணமடைந்த நிலையில் முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், 'தல' 'AK' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். இந்தச் செய்தி தமிழ் திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் துக்க அலை பரவியுள்ள நிலையில், பல முன்னணி திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக மோகினி மணி காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை இன்று காலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். அஜித் குமாரின் தந்தை பி.எஸ். மணி 2023 மார்ச் மாதம் காலமானதற்குப் பிறகு, மோகினி மணி தனிமையிலும், உடல்நலக் குறைவிலும் வாழ்ந்து வந்தார். இந்த இழப்பு அஜித் குடும்பத்திற்கு இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயாரின் மரண செய்தி கிடைத்ததும், துபாயில் தனிப்பட்ட பயணத்தில் இருந்த அஜித் குமார் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டார். இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் மூத்த சகோதரர் அனுப் குமார் மற்றும் இளைய சகோதரர் அனில் குமார் ஏற்கெனவே சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் இணைந்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் இல்லத்தில் திரண்டு, துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!
இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!