அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்திய பெண் தலைமறைவு! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.. அவிழும் முடிச்சுகள்..!
உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். பத்து சவரன் நகை அவர் திருடியதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்த நிலையில், நிகிதா தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து நிகிதா தலைமுறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது தாயாருடன் நிகிதா தலைமுறை வாகி இருப்பதாகவும் அவர் மீது ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு பண மோசடி வழக்கு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் நிகிதா பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நிகிதா தொடர்பாக அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு நல்ல விதமான கருத்து கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் கொலையை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்.. நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு.. அவிழும் முடிச்சுகள்!
இப்படி இருக்கும் சூழலில், அஜித் குமார் மீது திருட்டு பட்டம் சுமத்திய நிகிதா புகார் கொடுத்ததும், திருமங்கலம் காவல் நிலைய போலீசார் இருக்கும்போது, தனிப்படை போலீசாரை வரவழைப்பதற்கு கட்டளையிட்ட உயர் அதிகாரி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பணப்புகாரில் தொடர்புடைய நிகிதாவுக்காக தனிப்படை போலீசார் விரைந்தது ஏன் என்றும் 10 சவரன் நகைக்காக மூர்க்கத்தனமாக அடிக்க வேண்டியதன் அவசியம் என்ன எனவும் நிகிதா கூறிய புகாருக்கு சீருடை இல்லாமல் தனிப்பாடை போலீசாரை அனுப்பியது யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இதனிடையே உண்மையிலேயே நகை திருட்டு நடந்ததா, அல்லது நிகிதா பொய் புகார் கூறினாரா, வேண்டுமென்றே அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறாரா, நிகிதா தலைமுறைவாகி இருப்பதன் காரணம் என்ன, நிகிதாவுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிச்சு கொன்னுட்டீங்களே... அவரு என்ன தீவிரவாதியா? தமிழக அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி..!