×
 

சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!

சென்னை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இபிஎஸ் சந்தித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இருநாள் பயணமாக வந்துள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்று சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் வனதி சீனிவாசன் உள்ளிட்டோரும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

அமித் ஷா மகாராஷ்டிராவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். மாலை திருவண்ணாமலையில் தரையிறங்கும் அவர், கிரிவலப் பாதையில் உள்ள ஹெலிபேடில் இருந்து சாலை வழியாக ஸ்ரீ ரமணாசிரமத்திற்கு செல்ல உள்ளார். அங்கு சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்று சுமார் ஒரு மணி நேரம் தங்கிய பிறகு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்யச் செல்வார். 

மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையை விட்டு புதுச்சேரிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிபேடு, கிரிவலப் பாதை, ரமணாசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! அடுத்த நொடியே மைக் ஆஃப்... சட்டசபையில் பரபரப்பு

ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.இந்த பயணம் ஆன்மீக நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் இபிஎஸ் உடன் நடைபெற்ற சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share