×
 

அன்புமணிக்கு இப்படியொரு நிலையா?... தைலாபுரத்தில் பரபரப்பு... பாமகவில் கலசலப்பு...

பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லம் முன்பாக ஒட்டப்பட்டிருந்த அன்புமணியின் போஸ்டர்கள் இன்று அகற்றப்பட்டுள்ள சம்பவம் கட்சியினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை செயல்தலைவராக மாற்றி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தலிருந்து தந்தை மகனுக்குமான மோதல் போக்கு நிலவி வருவதால் பாமக சார்ந்தவர்கள் ஒரு புறம் அன்புமணியிடமும் மறுபுறம் ராதாசிடம் இருந்து வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்களாக உள்ள கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள், பொருளாளர். பொதுச்செயலாளர், சமூக நீதி பேரவை தலைவர்களை ராமதாஸ் நீக்கி பொருளாளராக சையத் மன்சூர் உசேன், பொதுச்செயலாளராக முரளி சங்கர் சமூக நீதி பேரவை தலைவராக கோபு உள்ளிட்டவர்களை நியமனம் செய்து வருகிறார்.

ராமதாஸ் ஒரு புறம் நியமனம் செய்தாலும் மறுபுறம் நீக்கபட்டவர்கள் அதே பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார். இந்நிலையில் பத்து மாவட்டங்களில் மாவட்ட பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகின்ற நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் ராமதாஸ் கூட்டி கூட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்குமான மோதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் தைலாபுரம் இல்லத்தின் முன்பாக வாயிலில் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் ஆகிய இருவரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை இன்று தைலாபுரம் ஊழியர்கள் அகற்றியுள்ளனர். அன்புமணி இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது பாமகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!

இதையும் படிங்க: என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share