#BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!
வருகிற ஜூலை 25 முதல் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக மோதல் நீடித்து வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 25 ஆம் தேதி ராமதாஸ் பிறந்தநாளன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாமக தலைவர் அன்புமணி திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் அவர் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” மேற்கொள்வதாக பாமக தலைமை நிலையம் அறிவிக்க வெளியிட்டுருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரிலிருந்து அவரின் சுற்று பயணம் தொடங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் விரிவான பயண திட்டம் சில நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!
ஜூலை 25 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை 100 நாட்கள் அன்புமணி சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்வதாக பாமக தலைமை நிலையம் அறிவித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரிலிருந்து அவரின் சுற்று பயணம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சாமின்னு நெனச்சோம்.. கல்லுனு புரிஞ்சிக்கிட்டோம்! ராமதாசை தாக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்!