×
 

“சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது...” - சி.எம்.விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்...!

பழைய பஞ்சாயத்துகளை எல்லாம் சட்டமன்றத்தில் வைத்து தீர்த்துக்கொள்வதாக தான் நான் பார்க்கிறேன் என வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுவரை திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியல் போட்டியில், விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கு இடையிலான புதிய போட்டி உருவாகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக அரசியலில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் கவனம் பெற்றுள்ளது. சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி மக்கள் மையமான அரசியலை முன்னெடுப்பது, இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவது, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக அண்ணாமலை தரப்பு முன்வைத்து வருகிறது. இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மிகப்பெரிய இளைஞர் வலையமைப்பை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டினால், இதனை முறைப்படியான அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது. 

அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் தொடங்கியிருக்கும் காலகட்டமும், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியும் அரசியல் ரீதியாக ஒப்பிடப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாற்று அரசியலை விரும்பும் வாக்காளர்கள் இரு தரப்பினருக்கும் முக்கிய இலக்காக இருப்பதால், ஒரே வாக்காளர் பிரிவை நோக்கி இரு புதிய அரசியல் சக்திகளும் நகரக்கூடும் என்ற பார்வை உருவாகியுள்ளது. 

இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

இதனால் சோசியல் மீடியாவிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை தவெக அரசை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தவெக அரசின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசியதாவது: சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது என்பது தான் என் கருத்து. சட்டமன்றம் ஆக்கப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக, மக்கள் பிரச்சனைகளை பேசும் இடமாக மட்டும் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று பழைய பஞ்சாயத்துகளை எல்லாம் சட்டமன்றத்தில் வைத்து தீர்த்துக்கொள்வதாக தான் நான் பார்க்கிறேன். அரசியல் வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்தும் சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பஞ்சாயத்தும் தீர்க்கப்படுகிறது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் புதியவர்கள் அவர்களுக்கு இன்னும் சில செசன்கள் வேண்டும்.எதிர்கட்சியிலும் புதியவர்கள் உள்ளனர். எனவே இப்போது சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க: டிஜிட்டல் படையை தயார் செய்யும் அண்ணாமலை? புதிய அறிவிப்பு! ‘வீ தி லீடர்ஸ்’ இணையதளத்தில் அடுத்த அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share