×
 

தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!

தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து அண்ணாமலை பேட்டியளித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதில் பாஜகவிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கின. நீண்ட நாட்களாக எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இது முக்கியமான விஷயம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் பெயர் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

அப்போது, தமிழக பாஜக தனது பெயரை வேட்பாளர் பட்டியலுக்கு பரிந்துரிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவே பரிந்துரை செய்யாத போது தலைமை எப்படி அறிவிக்கும் என கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை மே நான்காம் தேதிக்கு பிறகு கூறுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தோளோடு தோள் நிற்பேன்... பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை ஆதரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share