×
 

நீட் தேர்வுக்கு இவ்வளவு கெடுபிடிகளா?! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! அனல் பறக்கும் கேள்விகள்!

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன என பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: “சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்லும் ஏற்பாடு, ஏஐ தொழில்நுட்பம் கொண்ட நான்கு அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார சரிபார்ப்பு, பல கட்ட உடல் பரிசோதனை, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பு என தேர்வு மையத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா?” என்று வினவினார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார். ஆனால், தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அதிக நேரம் எடுக்கும் உடல் பரிசோதனை, தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரித்தது போன்ற நடவடிக்கைகள், ஏற்கனவே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: நீட் மறுதேர்வு நேர்மையா நடக்கும்! நீங்க படிக்கிற வேலைய பாருங்க! மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் அட்வைஸ்!

“பல மாதங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இந்தக் கூடுதல் சுமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை. நீட் மறுதேர்வுக்கு வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது” என அவர் கவலை தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும் அதே வேளையில், மாணவர்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முறையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் என்டிஏ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share