இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!
ராஜினாமா விவகாரத்தில் எவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கும் பலத்தை இழந்தது. தமிழக வெற்றி கழகம் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டது. சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமையிலான ஒரு பிரிவு தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது.
நம்பிக்கை வாக்கு எடுப்பின்போது 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் கட்சி தாவல் தடைச் சட்டம் அடிப்படையில் அந்த 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தது.
இந்த மனு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், மூன்று எம்எல்ஏக்கள் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எஸ். ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி பி. சத்யபாமா நேற்று சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இந்த மூவரும் பின்னர் தவெகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட மனு நிலுவையில் இருக்கும் பொது அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சபாநாயகர் பிரபாகர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!