கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம்.. சரவெடியாக வெடித்த ஆ. ராசா.!!
கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம் வந்துவிடுகிறது என்று ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார்.
கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம் வந்துவிடுகிறது என்று ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொமுச) சார்பில் மே தின சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தொமுச சார்பில், முதலமைச்சர் பிறந்த நாளையும், மே தின விழாவையும் இணைத்து சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது மகிழ்ச்சி. சிவப்பு உடையில் தலைவர் மிடுக்காக வருவது கம்பீரமாக இருக்கும். வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு இணையாக புலமைப்பெற்வர்கள் தொ.மு.சவினர். தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தான் கலைஞரின் கொள்கை வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்.
உலகத்தை மாற்ற வேண்டும் என்று என்னிய காரல் மார்ஸ்சின் கொள்கையை கொண்ட நாட்டிலேயே அவரது சிலை உடைக்கப்படுகிறது. ஆனால், காரல் மார்க்ஸ் சிலையை தமிழ்நாட்டில் எழுப்புகிறார் முதலமைச்சர். நீட் தேர்வு வேண்டாம் என்று முதன் முதலில் சொன்ன மாநிலம் தமிழ்நாடுதான். நாடாளுமன்றத்திலேயே நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்ன மாநிலமும் நாம்தான். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து திமுக அரசு முன்னெடுத்து வருகிறது. ஆனால்,
கறுப்பு, சிவப்பு வேட்டியை பார்த்தாலே சிலருக்கு பயம் வந்துவிடுகிறது. இதற்கு காரணம் நாங்கள் அல்ல. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் கொள்கை தத்துவத்துவத்தைத் தாங்கிப் பிடித்து எங்களை வழிநடத்திச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இதற்கு காரணம்.
தத்துவம் சரியாக இருந்தால் மட்டும் போதாது, அதனை தாங்கி பிடிக்க நேர்மையான தலைவன் வேண்டும். நமக்கு அப்படி ஒரு தலைவர் இருக்கிறார். அதனால்தான் நாம் துணிந்து சென்று கொண்டே இருக்கிறோம். சாதி கண்ணுக்கு தெரியாது. அது மூளையில் உள்ளது. கிராமத்தில் தெருக்களின் பெயர்களில் உள்ளது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தெரு என்று உள்ளது. அதனை உடைக்க எண்ணி எல்லா சமூகத்தினரையும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சமத்துவபுரத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. தற்போது காலனி என்பதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று 'காலனி' என்ற சொல்லை நீக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என ஆ.ராசா பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மே தினம்..! செஞ்சட்டை அணிந்து செவ்வணக்கம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!