காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி! பாஜகவில் இணைந்தார் புபென் போரா! அசாம் அரசியலில் அதிரடி திருப்பம்!!
காங்கிரசில் நீடிப்பதில் நியாமமில்லை என எண்ணிய போரா, அதிலிருந்து விலகி தன் ஆதரவாளர்களுடன் நேற்று பாஜகவில் இணைந்தார்.
அசாம் மாநிலத்தில் வரும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும், இருமுறை எம்எல்ஏவுமான புபேன் போரா (Bhupen Borah) கட்சியிலிருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்தார். இந்த நகர்வு காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸ் தலைவராக இருந்த போரா, கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு மாநில தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான குழு அவரை சந்தித்து சமாதான முயற்சி மேற்கொண்டது.
கட்சியை வலுப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வது குறித்து போரா தனது ஆலோசனைகளை வழங்கினார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. இதனால் இனி காங்கிரஸில் நீடிப்பதில் அர்த்தமில்லை என முடிவெடுத்த போரா, தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: ஒருத்தரு மிஞ்ச மாட்டாங்க! மொத்தமா காலி பண்ணிருவேன்! அசாமில் ஊடுருவல்காரர்களுக்கு அமித்ஷா வார்னிங்!
பாஜகவில் இணைந்தபோது போரா கூறியதாவது: “32 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றினேன். ஆனால் கட்சி அசாம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை. தலைமையை திருப்திப்படுத்துவதற்காகவே நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷா போன்றோர் பலமுறை அசாமுக்கு வந்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வெகு சில முறை மட்டுமே வந்துள்ளனர். கட்சியிடம் தேர்தலுக்கு காசு இல்லை. வேட்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் நடைமுறைதான் உள்ளது. என்னுடன் சிலர் இணைந்துள்ளனர். இன்னும் 600 பேர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர்.”
போராவின் இணைப்பு அசாம் காங்கிரஸுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து முதல்வரானவர். இப்போது போராவும் இணைந்துள்ளதால், வரும் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பலம் கிடைக்கும் என மாநில பாஜக நிர்வாகிகள் நம்புகின்றனர்.
அசாம் காங்கிரஸ் இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முக்கிய தலைவர் விலகல் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்தரு மிஞ்ச மாட்டாங்க! மொத்தமா காலி பண்ணிருவேன்! அசாமில் ஊடுருவல்காரர்களுக்கு அமித்ஷா வார்னிங்!