×
 

#BREAKING: ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர் கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..!!

75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது.

2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 110 விதியின் கீழ் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: அமுதன் கொலைக்கு போதைப் பொருள் காரணமா.? நடந்தது என்ன.? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் வரை 2.38 லட்சம் விவசாயிகள் பயிர் கடன் பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகமலை விவகாரம்..! தவிக்கும் மக்கள்... சட்டப்பேரவையில் விவாதம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share