×
 

"தம்பி இன்னைக்கு இல்ல.. சீக்கிரம் முடிச்சிடுவோம்-னு நெனச்சேன்"... ஆதவை வம்பிழுத்த பிரேமலதா..!

சட்டப்பேரவையில் ஆதம் அர்ஜுனா இல்லாததை சுட்டிக்காட்டி பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமீபத்திய நாட்களில் நடைபெற்ற விவாதங்களில் தேமுதிக பொதுச் செயலாளர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமூக நீதித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற போது, அவை நடைமுறைகள் மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு பதிலாக வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் சிக்கித் தவிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பிரேமலதா அவையில் தலையிட்டுப் பேசுகையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வாக்குவாதங்கள் நடப்பதாகவும், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பதாகவும் குறிப்பிட்டார். மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட வேண்டிய நேரத்தில், மக்கள் நலன் தொடர்பான விஷயங்களுக்கு மிகக் குறைந்த நேரமே ஒதுக்கப்படுவதாகவும், பெரும்பாலான நேரம் வாக்குவாதங்களில் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இது சட்டமன்றம், சண்டை மன்றம் கிடையாது. சண்டையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலக்கு வைத்து அவர் பேசினார். அமைச்சர் பேசாத வரை அவை அமைதியாகச் செல்வதாகவும், அவர் எழுந்து பேசத் தொடங்கியவுடன் சண்டை ஆரம்பித்துவிடுவதாகவும் பிரேமலதா தெரிவித்தார். 

அவரது தலையீடுகள் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்துவதால், அவருக்குப் பேச அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் பரிந்துரைத்தார். மக்களுக்காக அனைவரும் பேச வேண்டிய இடத்தில், ஒருவரின் பேச்சு தொடர்ந்து பிரச்சினையாக மாறுவது சரியல்ல என்பதே அவரது வாதமாக இருந்தது.இதற்கு முன்னர் கூட பிரேமலதா ஆதவ் அர்ஜுனா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். சட்டமன்றத்தில் பாதி நேரம் அவரே பேசுவதாகவும், எல்லாத் துறைகளுக்கும் அவரே பதில் அளிப்பதால் விவாதங்கள் திசைதிருப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும், இதனால் அவை நடைமுறைகள் நீண்டு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையும் படிங்க: ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!

நேபாளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பொருட்டு நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு அனுப்பியுள்ளார். அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் சென்றுள்ளார். அதன் காரணமாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. அமைச்சர் ஆதம் அர்ஜுனா இல்லாததை சுட்டிக்காட்டி பிரேமலதா விஜயகாந்த் பேசினார். தம்பி ஆதவ் அர்ஜுனா இன்னைக்கு இல்லை, சீக்கிரம் ஒன்றரை மணிக்கு முடிச்சிருவோம் என்று சொன்னீர்கள். முடிஞ்சிரும்னு நினைச்சேன், ஆனாலும் தொடர்ந்து கொண்டே தான் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறி உள்ளார். 

இதையும் படிங்க: வார்டு நிதி நிறுத்தம்... சென்னையை காப்பாற்ற வாங்க..! பேரவையில் சேகர்பாபு உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share