×
 

எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!

முதலமைச்சர் அறிவித்திருந்த கார் தங்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முதலமைச்சர் அறிவித்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கும் திட்டத்தைத் தனது கட்சி உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் சமீபத்தில் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய கார் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காரைப் பராமரிப்பதற்காக மாதம் எழுபத்தைந்தாயிரம் ரூபாயும் உதவியாளர் நியமனத்திற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் கலவையான கருத்துகள் எழுந்தன. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக முன்னர் கூறிய நிலையில் இத்தகைய செலவுகளை மேற்கொள்வது சரியானதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தப் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடன் சுமையில் உள்ளதாக முதலமைச்சரே கூறியிருப்பதால் அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு திமுகவைச் சேர்ந்த ஐம்பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் கார்களைப் பெற மாட்டார்கள் என முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்த முடிவு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

மேலும் உதயநிதி தனது பேச்சில் இன்னொரு முக்கியமான கருத்தையும் முன்வைத்தார். தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள விவரங்களின் அடிப்படையில் அவர்களின் நிதிச்சூழலை ஆராய்ந்து நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே கார்களை வழங்க வேண்டும் எனக் கோரினார். அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்குவதற்குப் பதிலாக தேவைப்படும் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்குவது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சரியான அணுகுமுறை என அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share