தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!
பெண்களிடம் எல்லை மீறி நடப்பதால், எங்களை போன்றவர்கள் கட்சி அலுவலகம் செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மீது மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அவர் பெண்களிடம் எல்லை மீறி நடப்பதால் கட்சி அலுவலகத்திற்கு செல்லவே பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவரது பதவியை பறிக்க வேண்டும் எனவும் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டாக புகார் அனுப்பியுள்ளனர். இந்த புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரை அனுப்பியவர்கள்: ஆயக்குடி பேரூராட்சி கவுன்சிலர் விமலா ராணி, கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், கடையம் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி, பாவூர்சத்திரம் மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளர் ஸ்டாலின் மேரி, செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் ராஜபாத்திமா, தென்காசி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா ஆகியோர் ஆவர்.
புகாரில் அவர்கள் கூறியிருப்பது: “மாவட்ட செயலாளர் ஜெயபாலனை சந்திக்க கட்சி அலுவலகம் சென்றால், பெண்கள் என்று பாராமல் கேலி, கிண்டல் செய்கிறார். ‘அம்மிக்கல், ஆட்டுக்கல், குத்துக்கல்’ என்று இழிவாக பட்டப்பெயர் சூட்டி அழைக்கிறார்.
இதையும் படிங்க: பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!
நாங்கள் கௌரவமான குடும்பங்களில் இருந்து கட்சிப் பணி செய்ய வந்துள்ளோம். இதனால் பிற ஆண்கள் கூட எங்களை கேலியாக பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. நான்கு பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை புறக்கணிக்கிறார். இதனால் எங்களைப் போன்ற பெண்கள் கட்சி அலுவலகத்திற்கே செல்ல பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.”
மேலும், ஜெயபாலன் கட்சிக்கு சில மாதங்களே ஆன கலாநிதி என்ற பெண்ணை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்து, அவருக்கு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் மகளிரணி தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளான்குளம் ஊராட்சி தலைவிக்கு எதிராக ஜாதி ரீதியில் கோஷ்டிகளை உருவாக்கி உட்கட்சி பூசலை தூண்டுவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான அவரது ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் ஜெயபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்ட அளவில் உள்ள இந்த பெண்கள் எதிர்ப்பு, கட்சியின் உயர்மட்டத்தில் பெரும் தலையீட்டை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிரணி தொண்டர்கள் “பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி சூழல் வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு டிகிரி மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!