“தலைவர்களின் ரூமுக்குள் போகாமல் பெண்களால் அரசியல் இருக்க முடியாது...” - பீகார் எம்.பி. சர்ச்சை கருத்து...!
சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை, தொகுதிகளின் மறுபங்கீட்டுடன் மத்திய அரசு இணைத்ததை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதன் விளைவாக, 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது.
பீகார் அரசியல் தலைவரும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. 'பெண்களின் அரசியல் வாழ்க்கை ஆண்களின் அறைகளில்தான் தொடங்குகிறது' என்று அவர் மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய அவர், பல அரசியல்வாதிகளை 'கழுகுகள்' என்றுவிமர்சித்தார். சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை, தொகுதிகளின் மறுபங்கீட்டுடன் மத்திய அரசு இணைத்ததை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதன் விளைவாக, 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது.
"அமெரிக்கா முதல் இந்தியா வரை, பெண்களுக்கு எதிராகக் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு, அவர்களை மோசமாக நடத்துபவர்கள் அரசியல்வாதிகள்தான். 90 சதவீதப் பெண்கள் ஒரு தலைவரின் அறைக்குள் செல்லாமல் அரசியலில் இருக்க முடியாது... இதுதான் தினமும் நடக்கிறது. அரசியல்வாதிகளின் சிசிடிவி காட்சிகள் தினமும் வெளிவருகின்றன... பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் இப்போது ஒரு கலாச்சாரமாகிவிட்டது," என்று பூர்ணியா எம்.பி. பப்பு யாதவ் கருத்து தெரிவித்தார் .
இந்தக் கருத்தை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பெண்கள் மீது கொண்டுள்ள மனப்பான்மையையே அவரது அறிக்கை பிரதிபலிக்கிறது என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா விமர்சித்தார். "காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மீண்டும் ஒருமுறை பெண்கள் விரோதிகள் என்பதை நிரூபித்துள்ளன. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்லாமல், ராகுல் காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருக்கும் பப்பு யாதவ், அரசியலில் உள்ள பெண்களுக்கு எதிராக மிகவும் அவமானகரமான, வெறுப்பு நிறைந்த மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அரசியலில் உள்ள 90 சதவீதப் பெண்கள் ஒரு ஆணின் அறைக்குள் செல்லாமல் சிறந்து விளங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் இழிவான கருத்து," என்று பூனாவாலா தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: இந்தியா பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது! பஹல்காம் தாக்குதல் கோரம்! நினைவுகூர்கிறார் பிரதமர் மோடி!
அதேபோல், இதற்கு முன்பு பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி, 'நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்' என்ற முழக்கத்தை எழுப்பிய பிரியங்கா காந்தி, யாதவின் கருத்துக்கள் குறித்து ஏன் மௌனம் காக்கிறார் என்று பூனாவாலா கேள்வி எழுப்பினார். பூர்னியா எம்.பி. யாதவின் கருத்துக்கள் அவரது மனநிலையையும், அவர் பெண்களைப் பார்க்கும் விதத்தையும் பிரதிபலிக்கின்றன என்று பாஜக தலைவர் சாரு பிரக்யா கூறினார்.
பெண்கள் குறித்த சர்ச்சை கருத்தையடுத்து பப்பு யாதவை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றுன், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சர்ச்சைக்கு எதிர்வினையாக, பீகார் மாநில மகளிர் ஆணையம் பப்பு யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் விதியை மீறி பரப்புரை.! தவெகவினர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்..!!