ஓட்டு பிச்சை கேட்டு வருவீங்க இல்ல... திருமாவை வறுத்தெடுத்த அண்ணாமலை ...!
எந்த மொழிக்கு இல்லாதது தமிழுக்கு உண்டு, தமிழும் ஆன்மீகமும் ஒன்றாக உள்ளது பெருமை. கந்த சஷ்டி கவசம் பாடினால் பிரச்னைகள் காணாமல் போய்விடும்
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு விபூதி அணிந்து, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார்.
தொடர்ந்து, 4 நாளைக்கு முன்னாடி திருப்பனங்குன்றத்திற்கு அரசியல்வாதி ஒருவர் சென்றிருக்கிறார். இன்னைக்கு எம்பியா இருக்காரு. ஒரு முக்கிய கட்சியினுடைய தலைவர் கோவிலில் சாமி கும்பிட்டு வந்தவரிடம், ஒரு அம்மா செல்பி கேக்குறாங்க நெத்தியில் இருக்கக்கூடிய திருநீறை அழித்துவிட்டு புகைப்படம் எடுத்து அந்த அம்மாவை அனுப்பி வைக்கிறாரு. இவங்கள மாதிரி ஆளுங்கள நல்லா நோட்டி பண்ணி வச்சிக்கோங்க, இவங்க நம்ப கிட்ட 2026 தேர்தல் அப்போ ஓட்டு பிச்சை கேட்டு வருவாங்க. அன்னைக்கு கோயிலுக்கு போவாங்க, நம்பள பத்தி நல்ல தனமா பேசுவாங்க.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!
அதை எல்லாம் இந்துக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் யாருக்கும் எதிரி இல்லை நம்மை எதிரியாக நினைப்பவர்களுக்கு நாம் எதிரி என்பதிலே மிக மிக மிக தெளிவாக இருக்க வேண்டும் என மக்கள அலர்ட் பண்ணியிருக்காரு. 2055 முடியும் போது உலகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக மாறவுள்ளது. நம்முடைய கலாச்சார சின்னங்கள் அழிய கூடாது. ஒருவர் கூட மதம்மாறக்கூடாது மதமாறியவர்களை மீண்டும் திரும்ப கொண்டுவர வேண்டும்.
எந்த மொழிக்கு இல்லாதது தமிழுக்கு உண்டு, தமிழும் ஆன்மீகமும் ஒன்றாக உள்ளது பெருமை. கந்த சஷ்டி கவசம் பாடினால் பிரச்னைகள் காணாமல் போய்விடும், கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல் உள்ளது. தமிழ்மொழியில் ஆன்மீகமும், அறிவியலும் கலந்துள்ளது.
திருமாவளவன் பெயரை அண்ணாமலை குறிப்பிடவில்லை என்றாலும், சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெற்றில் வைத்திருந்த தீருநீறை அழித்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!