கட்டு கட்டாக கையில் பணம்! புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை?
பைப்பை திறந்தால் தண்ணீர் கொட்டுவது போல், அண்ணாமலைக்கு கட்டுக்கட்டாய் பணம் வந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், கட்சி ஆரம்பிக்கும் வேலையில் அண்ணாமலை களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடிய அண்ணாமலைக்கு கடைசியில் ஏமாற்றமே தான் மிஞ்சியது. கடைசியில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார் அதுவும் இதுவரை நடக்கவில்லை. அடுத்ததாக எம்.பி.சீட் வாங்கி மத்திய அமைச்சரவையில் எல்.முருகன் போல செட்டில் ஆகிவிட நினைத்தார், ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை.
இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் அண்ணாமலைக்கு மாநில அளவிலும் பாஜகவில் எந்த பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனிடையே பிரபல பத்திரிகையாளர் தராசு ஷாம், யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பைப்பை திறந்தால் தண்ணீர் கொட்டுவது போல், அண்ணாமலைக்கு கட்டுக்கட்டாய் பணம் வந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், கட்சி ஆரம்பிக்கும் வேலையில் அண்ணாமலை களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணிக்காக எல்லாம் அண்ணாமலை ஓரங்கட்டப்படவில்லை என அடித்துக்கூறியுள்ள தராசு ஷாம், மோடியின் ஆதரவு அண்ணாமலைக்கு இல்லாமல் போனதே அவர் பதவி பறிக்கப்பட காரணம் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆதரவு முழுவதுமாக அண்ணாமலைக்கு இருந்திருந்தால், என்ன தான் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தாலும், அதெல்லாம் முடியாது அண்ணாமலை கூட இணைஞ்சி தான் நீங்க பணியாற்றனுன்னு சொல்லியிருப்பாரு. அந்த சப்போர்ட் இல்லாததால் தான் இப்போது அண்ணாமலை தனித்து விடப்பட்டுள்ளார் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!
கட்சி பதவி போன பிறகு அண்ணாமலை செய்த செயல்கள் பாஜக தலைமையை மிகவும் கடுப்பேற்றிவிட்டது. அமித் ஷாவே நேரில் அழைத்து கண்டிக்கும் அளவிற்கு அண்ணாமலை கூட்டணி கட்சியை விமர்சித்து வந்தார். இதனால் அமித் ஷாவும் அண்ணாமலை மீது கடுப்பில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தன்னை கைவிட்டு விட்டதாக எண்ணும் அண்ணாமலை, தனி கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னம் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில், அண்ணாமலை இப்போது கட்சி ஆரம்பித்தால் மட்டுமே தனது வெயிட்டை நிரூபிக்க முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வர உள்ள தேர்தலில் அண்ணாமலையின் தனிக்கட்சி 10 முதல் 15 சதவீத வாக்குகளைப் பெற்றால், அமித் ஷாவின் கடைக்கண் மீண்டும் அவர் மீது படும். அடுத்த தேர்தலுக்கு இவர் பாஜகவிற்கு பயன்படுவார் என்பதால் கட்சியையும், அவரையும் விட்டுவைக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ள தராசு ஷாம், அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தான் மிகப்பெரிய தலைவலியாக அமையும் எனக்கூறியுள்ளார்.
ஏனெனில் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கால் இருவரும் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து மோதிக்கொள்ளக்கூடும் என்றும், அதேபோல் இளைஞர்களின் செல்வாக்கு அண்ணாமலைக்கு அதிகம் இருப்பதால் அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் விஜய் மற்றும் உதயநிதிக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!