சீட்டு கேட்டு டெல்லி வராதீங்க!! சிபாரிசு ஸ்ட்ரிக்ட்லி நோ!! பாஜக தலைமை கொடுத்த வார்னிங்!
மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசு கேட்டு டில்லிக்கு வரக்கூடாது' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, டில்லி மேலிடம் எச்சரித்துள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' வாங்குவதற்காக டில்லி சென்று மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களிடம் சிபாரிசு கேட்கும் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லி மேலிடம் தெளிவாக தெரிவித்துள்ளது:
“எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கட்சி வளர்ச்சிக்காக களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். சீட் கேட்டு மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசுக்காக யாரும் டில்லிக்கு வரக்கூடாது. அந்த நேரத்தை கட்சி வேலைகளுக்காக செலவிடுங்கள்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் மூலமும், வாய்மொழியாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால், பா.ஜ.க.வில் போட்டியிட 'சீட்' வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மார்ச் 31 தான் பைனல்!! நக்சல் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும்! வார்னிங் கொடுத்த அமித்ஷா!
மாநில, மாவட்ட அளவில் பதவிகளை வைத்திருந்தாலும் களப்பணி செய்யாமல், டில்லியில் உள்ள மேலிட தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளுடன் நல்ல உறவு வைத்திருப்பவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர்.
இவர்கள் அடிக்கடி டில்லி சென்று, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிட்டு, அதை அதிமுகவிடம் கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என்று கோருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் போன்றோரிடம் தங்களை பரிந்துரைக்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த தகவல்கள் அமித் ஷாவின் கவனத்திற்கு சென்ற பிறகே இந்த கடும் எச்சரிக்கை வந்துள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் கட்சி வளர்ச்சிக்காக உழைப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களப்பணி செய்யாமல், செல்வாக்கு பயன்படுத்தி சீட் வாங்க முயல்வோருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க.வின் வேட்பாளர் தேர்வு செயல்முறை எப்படி இருக்கும் என்பது இப்போதே அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்யும் என்பது தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு தயாராகும் ஸ்கெட்ச்! புதுச்சேரி முதல்வருடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை!!