×
 

"அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்காக  பூர்ணசந்திரன் இறந்த போது எங்கே சென்றார் ஸ்டாலின். அப்போது ஏன் ஸ்டாலின் உருகவில்லை. கேவலமான ஆட்சி திமுக ஆட்சி.

மதுரை பொன்மெனி மகாபெரியவர் கோவிலில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராமஸ்ரீனிவாசன் 2027ம் ஆண்டுக்கான பராபவ வருக்ஷ பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லைபாலு மற்றும்  சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் இராமஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திமொழிக்கு எதிராக ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர் குறித்து ஸ்டாலின் உருகி உள்ளார். யாரும் தற்கொலை செய்யக்கூடாது. மனிதஉயிர் மாண்புடையது. ஆனால் ஒன்றை உயர்த்தியும், மற்றொன்றை தாழ்த்தியும் பேசக்கூடாது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார். திருப்பரங்குன்றம் தீர்ப்புக்காக  பூர்ணசந்திரன் இறந்த போது எங்கே சென்றார் ஸ்டாலின். அப்போது ஏன் ஸ்டாலின் உருகவில்லை. கேவலமான ஆட்சி திமுக ஆட்சி.

விஜயை நாங்கள் மிரட்டியா சிபிஐ விசாரணைக்கு அழைத்தோம். யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆதவ் அர்ஜூனா அவருக்கு என்னப்பா பைத்தியம் என்பது போல ரஜினியை பற்றி பேசுகிறார். யார் யாரை பற்றி பேசுவது?

இதையும் படிங்க: இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

எம்.பி.ஜோதிமணி காங்கிரஸ் பேருந்தில் ஏறிவிட்டு விஜய் பேருந்தில் துண்டு போடுகிறார். எதிர்காலத்தில் விஜயால் பலன்பெற இப்போதே துண்டு போட்டு வைக்கிறார். சசிகலா ராமதாஸ் இருவரும் பாவம். தள்ளாத வயதில் இவ்வளவு போராட வேண்டிய தேவை இல்லை. இரண்டு பெரிய முதியவர்கள் கூட்டணி அமைத்து என்ன செய்ய போகிறார்கள்.

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியா என்ற கேள்விக்கு, நான் சமைக்க வந்தவன். சாப்பிட வந்தவன் அல்ல. தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன் எனக்குறினார். 

இதையும் படிங்க: இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share