அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசிய பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை..! 3 பேர் சரண்..!
சமீப காலமாக மதுரையில் நடைபெறும் எந்த கட்சி நிகழ்ச்சிகளும்., கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
2022 மதுரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி கைதான பட்டுக்கோட்டை பாஜக பெண் பிரமுகர் சரண்யா தலை தனியாக உடல் தனியாக வெட்டி கொடூர கொலை சொத்து தகராறில் கொல்லப்பட்டார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45), என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். திங்கள் கிழமை இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார். அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்.. கெத்தான பதவியை கொத்தாக தூக்கப் போகும் பிடிஆர்..!
அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில், சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக பலியானார்.இது குறித்து வாட்டாத்திகோட்டை காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இவர் சமீப காலமாக மதுரையில் நடைபெறும் எந்த கட்சி நிகழ்ச்சிகளும்., கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. சரண்யாவின் கொலைக்கு பாஜக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!